Pages

Tuesday, April 10, 2012

ஒரு வரி கவிதை 





ஒரு வரியில் 

கவிதை 

கேட்டால் 

உன் மௌனத்தை தவிர 

வேறென்ன சொல்வேன்....!!!

இன்னமும் காணாமல் போகாதவர் பற்றிய அறிவிப்பு 




ஐந்தடி நான்கு அங்குலம் 

நல்ல சிவப்பு

மெலிந்ததேகம்

அசட்டு தனமாய் சிரிக்கும் 
ஒரு புகைப்படம் 

கீழே முகவரியும் 
தொலைபேசி எண்ணும்


மணமகன் தேவைக்கும்

காணவில்லைக்கும்

சிறிதளவு ஒற்றுமை 
வார்த்தையளவில் 
மட்டுமே உண்டு

போட்டோ பாத்தியா?

பிடிச்சிருக்கா?

கேட்கும்போது
தோன்றுகிறது 
காணவில்லை 
எவ்வளவோ 
பரவாயில்லை என்று....!!!   

தெய்வம்...???


 தெய்வம்





படையல் படைக்கும் போது

பசித்த இரண்டு கண்கள்

படையலை 

பார்த்து கொண்டிருக்கிறது.

படையலை இப்போது 

புசிக்குமா?

புசிக்காதா?

உங்கள் தெய்வம்...!!!