மனதில் பட்டதை பேசும் எனக்கு எழுத வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. அனுபவத்தை, பார்த்ததை, கேட்டதை எழுதும்போது சுய சரிதம் ஆகி விடுமோ என்ற பயமும் இருந்தது.இப்பொது தான் புரிகிறது சுயத்தை தேடி அலைபவனின் வாழ்க்கை எப்படி சரிதமாகுமென்று.
Tuesday, April 10, 2012
இன்னமும் காணாமல் போகாதவர் பற்றிய அறிவிப்பு
ஐந்தடி நான்கு அங்குலம்
நல்ல சிவப்பு
மெலிந்ததேகம்
அசட்டு தனமாய் சிரிக்கும்
ஒரு புகைப்படம்
கீழே முகவரியும்
தொலைபேசி எண்ணும்
மணமகன் தேவைக்கும்
காணவில்லைக்கும்
சிறிதளவு ஒற்றுமை
வார்த்தையளவில்
மட்டுமே உண்டு
போட்டோ பாத்தியா?
பிடிச்சிருக்கா?
கேட்கும்போது
தோன்றுகிறது
காணவில்லை
எவ்வளவோ
பரவாயில்லை என்று....!!!
Monday, April 2, 2012
Subscribe to:
Posts (Atom)