Pages

Sunday, November 4, 2012

சிரிப்பு மாதிரி தானே அழுகையும் ஓர் அனுபவம்?


வலியில் இருந்து தப்பித்து ஓடுவதற்கான வழியா தற்கொலையை தேர்ந்தெடுப்பதும் அதற்கு தோல்வியை காரணம் காட்டுவது போல அபத்தம் வேறு ஏதுமில்லை. ஆணோ... பெண்ணோ..? யாராக இருந்தாலும் வாழ்கையை காதலிக்கணும். அப்போது தான் துன்பம் ஓடி ஒளிகிற விசயமாக இல்லாமல், கடந்து வரவேண்டிய அனுபவமாக இருக்கும்.
சிரிப்பு மாதிரி தானே அழுகையும் ஓர் அனுபவம்?

Saturday, November 3, 2012

தொடக்கமும் முடிவும்



எல்லோரும் எப்பவும் கூடவே இருப்பாங்கனு நம்புவதுதான் பெரிய அறியாமை.
கூடுவதும், பிரிவதும், பிறப்பு இறப்பு மாதிரி மனித வாழ்கையில் தவிர்க்க முடியாத விஷயம் .எப்படி கூடினோம் எப்படி பிரிந்தோம்கிறதுதான் முக்கியம். ஏன்னா மனுசனோட வாழ்கையில் தொடக்கமும் முடிவும் தனிமைதான்....