"ஜீவா" என்கின்ற "ஜீவானந்தம்" என்ற ஒரு பெருமகனார் இருந்தார். தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர். கம்யூனிஸ கட்சியை சார்ந்தவர்..! மிகப்பெரிய பேச்சாளர்...!
அவருடைய பேச்சுக்களை எல்லாம் அக்காலத்து மாற்று கட்சியினர் கூட ரசித்தனர், வரவேற்றனர். தன்னல
அவருடைய பேச்சுக்களை எல்லாம் அக்காலத்து மாற்று கட்சியினர் கூட ரசித்தனர், வரவேற்றனர். தன்னல
மற்ற அரசியல்வாதி..! காமராஜரின் நெருங்கிய நண்பர்.
...
முக்கியமான விஷயம் அவர் பரம ஏழை. (தமிழ் நாட்டில் ஒரு அரசியல்வாதி ஏழையாய் இருப்பது அதிசயம் தானே..!)
ஒரு முறை திருச்சியிலே மாநாடு ஒன்றை முடித்து விட்டு, சென்னை திரும்ப ரயில் நிலையத்தை வந்து அடைந்தார். இரவு நேரம் என்பதால் ரயில் ஏற முடியவில்லை. பிறகு அங்கேயே படுத்து கொண்டார்.
இப்போது போலவே, அப்போதும் யாரும் அவரை கவனிக்கவில்லை. இரவு உணவு கூட உண்ணவில்லை.
விடியற்காலை அவ்வழியாக வந்த காமராஜர், நண்பர் ஜீவாவை பார்த்ததும் மகிழ்ந்து அவரிடம் பேச தொடங்கினார். ஜீவா அவர்கள் சிறிது பேசிவிட்டு, பிறகு தன் நண்பரிடம் "எனக்கு ரொம்ப பசிக்கிறது. கையில் பணம் இல்லை ஒரு டீயும், பன்னும் வாங்கி தாருங்கள்" என்றார். உடனே காமராஜர் விரைந்து வாங்கிக்கொடுத்தார்.
அதனை வாங்கி கொடுக்கும் போது அவர் சட்டை பையில் உள்ள சில்லறைகள் சத்தம் கேட்டது. காமராஜர் உடனே "என்ன ஜீவா கையில் பணம் இல்லை என்று சொன்னீர்களே, ஆனால் சத்தம் கேட்கிறதே, அதை வைத்து சாப்பிட வேண்டியது தானே..???" என்று அக்கறையோடு கேட்டார்.
அதற்கு ஜீவா உடனே சொன்னார். "அது கட்சி பணம், எனக்கு உரியது அல்ல" என்றார்.
கையில் பணம் இருந்தும், அது கட்சி பணம் என்பதனால் இரவு முழுவதும் பட்டினியாய் இருந்த அந்த நேர்மையை கண்டு உள்ளம் மகிழ்ந்து, தன் நண்பரை ஆர தழுவிக்கொண்டார். இதனை உடனிருந்து கண்டவர் நம் குமரி அனந்தன் அவர்கள்.
இப்படிப்பட்ட அரசியல் தலைவர்கள் இனி நம் தமிழ் நாட்டில் பிறக்கப்போவதும் இல்லை....
நம் நாட்டின் அரசியல் மாறப்போவதும் இல்லை..
நமது அரசியல்வாதிகள் திருந்தப்போவதுமில்லை...
என்றைக்கு காமராஜர், கக்கன், ஜீவா போன்ற சுத்தமான நாம், அரசியலில் நுழைகின்றோமோ, அன்று தான் நமது தமிழகத்தின் தலைவிதி மாறும்....
அதுவரை நம் நாட்டின் விதியை நொந்து கொள்வதை தவிர, வேறொன்றும் சொல்வதற்கில்லை....
...
முக்கியமான விஷயம் அவர் பரம ஏழை. (தமிழ் நாட்டில் ஒரு அரசியல்வாதி ஏழையாய் இருப்பது அதிசயம் தானே..!)
ஒரு முறை திருச்சியிலே மாநாடு ஒன்றை முடித்து விட்டு, சென்னை திரும்ப ரயில் நிலையத்தை வந்து அடைந்தார். இரவு நேரம் என்பதால் ரயில் ஏற முடியவில்லை. பிறகு அங்கேயே படுத்து கொண்டார்.
இப்போது போலவே, அப்போதும் யாரும் அவரை கவனிக்கவில்லை. இரவு உணவு கூட உண்ணவில்லை.
விடியற்காலை அவ்வழியாக வந்த காமராஜர், நண்பர் ஜீவாவை பார்த்ததும் மகிழ்ந்து அவரிடம் பேச தொடங்கினார். ஜீவா அவர்கள் சிறிது பேசிவிட்டு, பிறகு தன் நண்பரிடம் "எனக்கு ரொம்ப பசிக்கிறது. கையில் பணம் இல்லை ஒரு டீயும், பன்னும் வாங்கி தாருங்கள்" என்றார். உடனே காமராஜர் விரைந்து வாங்கிக்கொடுத்தார்.
அதனை வாங்கி கொடுக்கும் போது அவர் சட்டை பையில் உள்ள சில்லறைகள் சத்தம் கேட்டது. காமராஜர் உடனே "என்ன ஜீவா கையில் பணம் இல்லை என்று சொன்னீர்களே, ஆனால் சத்தம் கேட்கிறதே, அதை வைத்து சாப்பிட வேண்டியது தானே..???" என்று அக்கறையோடு கேட்டார்.
அதற்கு ஜீவா உடனே சொன்னார். "அது கட்சி பணம், எனக்கு உரியது அல்ல" என்றார்.
கையில் பணம் இருந்தும், அது கட்சி பணம் என்பதனால் இரவு முழுவதும் பட்டினியாய் இருந்த அந்த நேர்மையை கண்டு உள்ளம் மகிழ்ந்து, தன் நண்பரை ஆர தழுவிக்கொண்டார். இதனை உடனிருந்து கண்டவர் நம் குமரி அனந்தன் அவர்கள்.
இப்படிப்பட்ட அரசியல் தலைவர்கள் இனி நம் தமிழ் நாட்டில் பிறக்கப்போவதும் இல்லை....
நம் நாட்டின் அரசியல் மாறப்போவதும் இல்லை..
நமது அரசியல்வாதிகள் திருந்தப்போவதுமில்லை...
என்றைக்கு காமராஜர், கக்கன், ஜீவா போன்ற சுத்தமான நாம், அரசியலில் நுழைகின்றோமோ, அன்று தான் நமது தமிழகத்தின் தலைவிதி மாறும்....
அதுவரை நம் நாட்டின் விதியை நொந்து கொள்வதை தவிர, வேறொன்றும் சொல்வதற்கில்லை....
No comments:
Post a Comment